மாண்புகளைக் கொண்டாடுவோம்! வெற்றிகளைக் குவிப்போம்.
மாண்புக்குரிய தமிழ் வளர்ச்சித் துறையால், 5124வது தமிழ்த்தொடராண்டிற்கு (2022-2023) தெரிவுசெய்யப்பட்ட அகவை முதிர்ந்த தமிழறிஞர் நூற்றுவரில் நானும் ஒருவன். அந்த அகவை முதிர்ந்த தமிழறிஞர் நூற்றுவரில் நீங்களும் ஒருவராக இருந்தால், 'அகவை முதிர்ந்த 100 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை' என்கிற இந்த மாண்பைக் கொண்டாடி அதனை முழுமையாக அடைவதற்கான ஒவ்வொரு படிநிலையிலும் வெற்றிகளைத் தொடர்ந்து குவிப்போம் என்று 'ஊக்குவிப்பதற்கானது இந்தக் கட்டுரை.
03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5126:
5124வது தமிழ்த்தொடராண்டிற்கு (2022-2023) தெரிவுசெய்யப்பட்ட அகவை முதிர்ந்த 100 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அரசாணைகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.சாமிநாதன் அவர்களின் பொற்கரங்களால் 22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5126: (07.08.2024) புதன்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு சென்னைப் பலகலைக்கழகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் கூட்ட அரங்கத்தில் வழங்கப்பட்டது.
நாம் பெற்ற அந்த அரசாணையின் தொடர்நடவடிக்கையாக நூறு தமிழ் அறிஞர்களுக்கும் ஓய்வுதியம் அனுப்பும் வகைக்கான பணிப்பொறுப்பை தமிழ்நாடு கணக்கு அதிகாரி அலுவலகம் முடித்து தமிழ்நாட்டின் அனைத்துக் கருவூலங்களுக்கும் அனுப்பிவிட்டது என்பதை திருப்பூர் மாவட்டக் கருவூலப் பணிப்பொறுப்பாளர்கள் செம்பணி மூலம் அறிய முடிகிறது.
திருப்பூர் மாவட்டக் கருவூலம், அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித் தொகைக்கு அரசாணை பெற்றுள்ள திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.அ.மனோகரன், திரு.வெ.மோகனசுந்தரம் ஆகிய இருவருக்கும், தங்கள் வங்கிக் கணக்கிற்கு உதவித் தொகை பெறும் வகைக்கு நிழற்படம், வங்கிகணக்கு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க முதலாவதாக அழைப்பு அனுப்பியுள்ளது.
இந்த அழைப்பில் அமைந்துள்ள உள்ளடக்கத்தின் மூலமே தமிழ்நாடு கணக்கு அதிகாரி அலுவலகத்தின் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நூற்றுவர் பயனடைவதற்கான செம்பணி முடிக்கப்பட்டுவிட்டது என்கிற தகவலை அறியமுடிகிறது.
திருப்பூர் மாவட்டக் கருவூலம் போல, விருதுநகர் மாவட்டக் கருவூலமும், அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித் தொகைக்கு அரசாணை பெற்றுள்ள விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.கு.ராஜா, திரு.வெ.சீ.ராமதாஸ், திரு.சோ,ஒண்டிவீரன் ஆகிய மூவருக்கும், தங்கள் வங்கிக் கணக்கிற்கு உதவித் தொகை பெறும் வகைக்கு நிழற்படம், வங்கிகணக்கு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க அழைப்பு அனுப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.கோ.கனகசுந்தரம் மற்றும் தமிழறிஞர்.செ.தாமஸ் ஆகியோருக்கும் இந்த ஆணை வந்துள்ளதை இந்த இரண்டு தமிழறிஞர்களும் செங்கல்பட்டு மாவட்டக் கருவூலத்திற்குச் சென்று அறிந்து உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.
அந்த ஆணை தமிழறிஞர்கள் வசிக்கும் சொந்த ஊரின் கிளைக் கருவூலத்திற்கு தொடர் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டு விட்டதாக இன்று தகவல் கிடைத்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.இரா.திருவேங்கடம், தமிழறிஞர்.சி,ஞானசேகரன், தமிழறிஞர்.பா.வஜ்ஜிரம் ஆகியோருக்கும் இந்த ஆணை வந்துள்ளதை இந்த மூன்று தமிழறிஞர்களும் தருமபுரி மாவட்டக் கருவூலத்திற்குச் சென்று அறிந்து உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.
இவர்கள் மூவரும் பேருந்து இலவசப்பயண சிறப்பு அட்டை பெறும் வகைக்கு தமிழ்வளர்ச்சித் துறையின் இணை இயக்குநரின் ஒப்புதலுக்காக விண்ணப்பம் கொடுத்து வந்துள்ளனர்.
தமிழறிஞர்.குமரிநாடன்.ரு
தமிழறிஞர்.கனகசுந்தரம்.கோ
தமிழறிஞர்.தாமஸ்.செ
தமிழறிஞர்.பழனியப்பன்.வே
தமிழறிஞர்.மணிவண்ணன்.சி
ஆகியோர் தமிழ்நாடு அரசு பேருந்து கழகங்களில் பயணம் செய்ய சிறப்பு பயண அட்டை பெற்றுள்ளனர்.
இதற்கிடையில் நமது எதிர்காலக் கோரிக்கைகளுக்காக, தமிழ்நாடு அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் முன்னேற்றச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
தமிழறிஞர்.சீனு.செந்தாமரைக்கண்ணன் அவர்கள் மாநிலத் தலைவராகவும்,
தமிழறிஞர்.முஜிபூர்ரஹ்மான் அவர்கள் மாநிலச் செயலாளராகவும்,
தமிழறிஞர்.பழனியப்பன்.வே மாநிலப் பொருளாளராகவும்,
தமிழறிஞர்.கூத்தரசன்.அ மாநிலத் துணைத்தலைவராகவும்,
தமிழறிஞர்.வைகைமாலா.வே மாநிலத் துணைத்தலைவராகவும்,
தமிழறிஞர்.குமரிநாடன்.ரு மாநிலத் துணைச்செயலாளராகவும்,
தமிழறிஞர்.முனைவர்.மணிமொழி.மு மாநிலத் துணைச் செயலாளராகவும்,
பொறுப்பேற்றுள்ளார்கள்.
5124வது தமிழ்த்தொடராண்டிற்கு (2022-2023) தெரிவுசெய்யப்பட்ட அகவை முதிர்ந்த தமிழறிஞர் நூற்றுவரில்:
01. தமிழறிஞர். நெல்லைகிருஷ்ணன்.அ பேசி:9445425504
02. தமிழறிஞர். சிவபெருமான்.வெ.க பேசி:9940301905
03. தமிழறிஞர். குமரிநாடன் பேசி:9500612859
04. தமிழறிஞர். முஜிபுர்ரஹ்மான்.பி பேசி;9442321635
06. தமிழறிஞர். சுந்தரி.ந பேசி:9500028833
07. தமிழறிஞர். பாலகிருஷ்ணன்.நா பேசி:7358040043
12. தமிழறிஞர். பொன்னிவளவன்.பு.செ பேசி;7200584614
19. தமிழறிஞர். சக்திவேல்.நாக பேசி:9952655983
20. தமிழறிஞர். புருசோத்தமன்.ப பேசி:9487231064
21. தமிழறிஞர். வெங்கடேசன்.இரா பேசி:9486385636
22. தமிழறிஞர். செந்தாமரைக்கண்ணன்.சீ பேசி:9488946078
23. தமிழறிஞர். பெரியசாமி.ந பேசி:6369923309
24. தமிழறிஞர். முனைவர்.மணிமொழி.மு பேசி:9486629878
26. தமிழறிஞர். வைகைமாலா.தே பேசி:9943382723
27. தமிழறிஞர். பழனியப்பன்.வே பேசி:9789640173
28. தமிழறிஞர். மணிவண்ணன்.சி பேசி:9095706731
29. தமிழறிஞர். கிருஷ்ணமூர்த்தி.அ பேசி:9791849661
31. தமிழறிஞர். கணேசன்.ஏ பேசி:9363696841
36. தமிழறிஞர். திருவேங்கடம்.இரா பேசி:9443534574
53. தமழறிஞர். மனோகரன்.அ பேசி:8124283081
62. தமிழறிஞர். ஹரிதாஸ்.தீ பேசி:9952573481
65. தமிழறிஞர். இரவி.இல பேசி:9952113194
83.தமிழறிஞர்.ராமதாஸ்.வெ.சீ பேசி:7708730829
89. தமிழறிஞர். கனகசுந்தரம்.கோ பேசி:9360050970
90. தமிழறிஞர். தாமஸ்.செ பேசி:9444335984
ஆகிய 26 தமிழறிஞர்களின் செல்பேசி எண்களை தேடிப்பெற்றதால் அவர்களோடு எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது.
இந்த 26ல் 11 தமிழறிஞர்களின் ஆணையின் நிலை குறித்து அறியப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 15 தமிழறிஞர்களின் ஆணையின் நிலை என்ன என்பதையும் மொததமாக 89 தமிழறிஞர்களின்; ஆணையில் நிலை என்ன என்பதும் தெரியவேண்டி இருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,167.
கருத்துகள்
கருத்துரையிடுக