இடுகைகள்

தமிழ்நாட்டின் அடையாளமாகக் கொண்டாடுவோம்! அகவை முதிர்ந்த தமிழறிஞர்களில் நூறுஆண்டு அகவையர் குமர.கோவிந்தன்

படம்
கோவை மாவட்டக் கருவூல அதிகாரிக்கு செம்பணி ஆற்றுவதற்கு மிகச்சிறப்பான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களில் நூறுஆண்டு அகவையர் குமர.கோவிந்தன். அவர்களை உடனடியாக அழைத்து உதவித்தொகை (பென்சன்) வழங்குவதற்கான புத்தகமும், வங்கி வழியாக உதவித்தொகையும் வழங்கி ஆவன செய்யும் வகைக்கான பாடாற்றலே அது. அருள்செய்க! என்று வேண்டுவதற்கே இந்தக் கட்டுரை. எனது ஒருங்கிணைப்பு மடலைப் பார்த்துவிட்டு இன்று என்னோடு தொடர்பில் வந்தார் அகவைமுதிர்ந்த தமிழறிஞர். குமர.கோவிந்தன். அவருக்கு நூறு அகவை ஆகிறது என்கிற தகவலைக் கேட்டு மலைத்துப்போனேன். தமிழ்வளர்ச்சித் துறை கண்டெடுத்த ஒரு தமிழறிஞருக்கு நூறு அகவையா! இவர் தமிழ்நாட்டின் அடையாளம் அல்லவா? என்று எண்ணி மகிழ்ந்தேன். தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்கள் தமது அகவை முதிர்ந்த காலத்தில் வறுமையில் வாடக்கூடாது என்கிற சீரிய நோக்கில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி என்கிற திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்த்தொடராண்டு 5080லிருந்து  (1978) முதல் செயற்படுத்தப்பட்டு வருகிறது. மாதந்தோறும் ரூபாய் 3500 ஓய்வூதியத்துடன் மருத்துவப்படி ரூபாய் 500 மற்றும் தமிழ்...

5124வது தமிழ்த்தொடராண்டிற்கு (2022-2023) தெரிவுசெய்யப்பட்ட அகவை முதிர்ந்த தமிழறிஞர் நூற்றுவருக்கு தமிழ்வளர்ச்சித் துறை வழங்கியுள்ள ஆணையின் ஒவ்வொரு தமிழறிஞருக்குமான நிலை

படம்
5124வது தமிழ்த்தொடராண்டிற்கு (2022-2023) தெரிவுசெய்யப்பட்ட அகவை முதிர்ந்த தமிழறிஞர் நூற்றுவருக்கு, தமிழ்வளர்ச்சித் துறை வழங்கியுள்ள ஆணையின் ஒவ்வொரு தமிழறிஞருக்குமான நிலை சென்னை மாவட்டம் 01. தமிழறிஞர். நெல்லைகிருஷ்ணன்.அ பேசி:9445425504 02. தமிழறிஞர். சிவபெருமான்.வெ.க பேசி:9940301905 அ. தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை: பெற்றுள்ளார் ஆ. கருவூலத்தில் இருந்து உதவித்தொகை (பென்சன்) புத்தகம் பெற்றுள்ளார். இ. வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை பெற்று வருகிறார். 03. தமிழறிஞர். குமரிநாடன் பேசி:9500612859 அ. தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை: பெற்றுள்ளார் ஆ. கருவூலத்தில் இருந்து உதவித்தொகை (பென்சன்) புத்தகம் பெற்றுள்ளார். இ. வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை பெற்று வருகிறார். 04. தமிழறிஞர். முஜிபுர்ரஹ்மான்.பி பேசி;9442321635 அ. தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பயணிக்க சிறப்பு அட்டை: பெற்றுள்ளார் ஆ. கருவூலத்தில் இருந்து உதவித்தொகை (பென்சன்) புத்தகம் பெற்றுள்ளார். இ. வங்கிக் கணக்கு வழியாக உதவித்தொகை பெற்று வருகிறார். 05. தமிழறிஞர். ரவிசுப்பிரமணியன்.ந பேசி: 06. தமிழறிஞர். ...

மாண்புகளைக் கொண்டாடுவோம்! வெற்றிகளைக் குவிப்போம்.

படம்
மாண்புக்குரிய தமிழ் வளர்ச்சித் துறையால், 5124வது தமிழ்த்தொடராண்டிற்கு (2022-2023) தெரிவுசெய்யப்பட்ட அகவை முதிர்ந்த தமிழறிஞர் நூற்றுவரில் நானும் ஒருவன். அந்த அகவை முதிர்ந்த தமிழறிஞர் நூற்றுவரில் நீங்களும் ஒருவராக இருந்தால், 'அகவை முதிர்ந்த 100 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை' என்கிற இந்த மாண்பைக் கொண்டாடி அதனை முழுமையாக அடைவதற்கான ஒவ்வொரு படிநிலையிலும் வெற்றிகளைத் தொடர்ந்து குவிப்போம் என்று 'ஊக்குவிப்பதற்கானது இந்தக் கட்டுரை. 03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5126: 5124வது தமிழ்த்தொடராண்டிற்கு (2022-2023) தெரிவுசெய்யப்பட்ட அகவை முதிர்ந்த 100 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அரசாணைகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.சாமிநாதன் அவர்களின் பொற்கரங்களால் 22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5126: (07.08.2024) புதன்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு சென்னைப் பலகலைக்கழகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் கூட்ட அரங்கத்தில் வழங்கப்பட்டது.  நாம் பெற்ற அந்த அரசாணையின் தொடர்நடவடிக்கையாக நூறு தமிழ் அறிஞர்களுக்கும் ஓய்வுதியம் அனுப்பும் வகைக்கான பணிப்பொறுப்பை தமிழ்நாடு கணக்கு அத...