தமிழ்நாட்டின் அடையாளமாகக் கொண்டாடுவோம்! அகவை முதிர்ந்த தமிழறிஞர்களில் நூறுஆண்டு அகவையர் குமர.கோவிந்தன்

கோவை மாவட்டக் கருவூல அதிகாரிக்கு செம்பணி ஆற்றுவதற்கு மிகச்சிறப்பான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களில் நூறுஆண்டு அகவையர் குமர.கோவிந்தன். அவர்களை உடனடியாக அழைத்து உதவித்தொகை (பென்சன்) வழங்குவதற்கான புத்தகமும், வங்கி வழியாக உதவித்தொகையும் வழங்கி ஆவன செய்யும் வகைக்கான பாடாற்றலே அது. அருள்செய்க! என்று வேண்டுவதற்கே இந்தக் கட்டுரை. எனது ஒருங்கிணைப்பு மடலைப் பார்த்துவிட்டு இன்று என்னோடு தொடர்பில் வந்தார் அகவைமுதிர்ந்த தமிழறிஞர். குமர.கோவிந்தன். அவருக்கு நூறு அகவை ஆகிறது என்கிற தகவலைக் கேட்டு மலைத்துப்போனேன். தமிழ்வளர்ச்சித் துறை கண்டெடுத்த ஒரு தமிழறிஞருக்கு நூறு அகவையா! இவர் தமிழ்நாட்டின் அடையாளம் அல்லவா? என்று எண்ணி மகிழ்ந்தேன். தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்கள் தமது அகவை முதிர்ந்த காலத்தில் வறுமையில் வாடக்கூடாது என்கிற சீரிய நோக்கில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி என்கிற திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்த்தொடராண்டு 5080லிருந்து (1978) முதல் செயற்படுத்தப்பட்டு வருகிறது. மாதந்தோறும் ரூபாய் 3500 ஓய்வூதியத்துடன் மருத்துவப்படி ரூபாய் 500 மற்றும் தமிழ்...