மாண்புகளைக் கொண்டாடுவோம்! வெற்றிகளைக் குவிப்போம்.

மாண்புக்குரிய தமிழ் வளர்ச்சித் துறையால், 5124வது தமிழ்த்தொடராண்டிற்கு (2022-2023) தெரிவுசெய்யப்பட்ட அகவை முதிர்ந்த தமிழறிஞர் நூற்றுவரில் நானும் ஒருவன். அந்த அகவை முதிர்ந்த தமிழறிஞர் நூற்றுவரில் நீங்களும் ஒருவராக இருந்தால், 'அகவை முதிர்ந்த 100 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை' என்கிற இந்த மாண்பைக் கொண்டாடி அதனை முழுமையாக அடைவதற்கான ஒவ்வொரு படிநிலையிலும் வெற்றிகளைத் தொடர்ந்து குவிப்போம் என்று 'ஊக்குவிப்பதற்கானது இந்தக் கட்டுரை. 03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5126: 5124வது தமிழ்த்தொடராண்டிற்கு (2022-2023) தெரிவுசெய்யப்பட்ட அகவை முதிர்ந்த 100 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அரசாணைகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.சாமிநாதன் அவர்களின் பொற்கரங்களால் 22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5126: (07.08.2024) புதன்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு சென்னைப் பலகலைக்கழகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் கூட்ட அரங்கத்தில் வழங்கப்பட்டது. நாம் பெற்ற அந்த அரசாணையின் தொடர்நடவடிக்கையாக நூறு தமிழ் அறிஞர்களுக்கும் ஓய்வுதியம் அனுப்பும் வகைக்கான பணிப்பொறுப்பை தமிழ்நாடு கணக்கு அத...